Author: Editor web2
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தவெக பக்கம் சாய்ந்து, புதிய ஆட்சியில் அமைச்சரவை இடத்தையும் பெற்றது. இதனால் திமுக – காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிந்த நிலையில், தற்போது காலியாகியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி விவகாரம் மீண்டும் இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் மோதலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. காலியான எம்.பி பதவி அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்டிருப்பதால், அந்த இடத்தை யாருக்கு வழங்குவது என்பது முழுக்க முழுக்க தவெக தலைமையின் முடிவாக இருந்தது. ஆரம்பத்தில், தவெக தனது முதல் மாநிலங்களவை உறுப்பினரை டெல்லிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அந்த இடத்தை காங்கிரஸுக்கு…
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து மேலும் பல முக்கியத் தடயங்கள், வாக்குமூலங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடையே, சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கியக் குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின்…
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், 2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மீண்டும் பாதிக்கப்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான…
தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்டதாகவும், ஆனால் அதிமுகவில் அப்போது நிலவிய குழப்பம் காரணமாக விஜய் சந்திக்க எடப்பாடி தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, சிடிஆர் நிர்மல்குமார் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்தார். “விஜய் தரப்பிலோ, தவெக அலுவலகத்திலிருந்தோ, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை. யாரோ சில அதிமுக தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுவதும் உண்மையல்ல” என்று தெரிவித்தார். மேலும், “இளைஞர்களிடம் சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா பாணி பிரசாரங்கள் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி விஜய் வெற்றி பெற்றுள்ளார். அது நீண்டகால அரசியல் உழைப்பின் பலன்…
பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்வுகளில் த.வெ.க. அரசு தலையிட்டு சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரத்தை பாதித்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் எந்தத் தடையும் இன்றி நடைபெற்ற பக்ரீத் திருநாள் குர்பானி நிகழ்வுகளுக்கு, த.வெ.க. ஆட்சியில் முதன்முறையாக இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குர்பானி தொடர்பாக தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் சிறுபான்மையின மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தியதாக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதே அரசில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறுவது முரண்பாடான நிலைப்பாடு என ஆவடி நாசர் விமர்சித்துள்ளார். குர்பானி…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை முன்வைத்து அதிமுகவை விமர்சித்த தவெக ஐடி விங்கிற்கு, அதிமுக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட விமர்சனப் பதிவுக்கு பதிலளித்துள்ள அதிமுக ஐடி விங், “‘2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. அவ்வளவு தில் இருந்தால், ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’ படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளது. தவெக அட்டாக் என்ன? முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொறுப்பேற்றவர்கள் யார், காவல்துறை யாரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதைக் குறித்து தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது…
சட்டப்பேரவையில் சோர்வையும் தயக்கத்தையும் வெளிப்படுத்திய முதல்வர் விஜய், திருச்சியில் திடீரென வீர வசனங்கள் பேசி அரசியல் நாடகம் ஆடுகிறார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா,“தான் வகிக்கும் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதல்வர் விஜய், திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக பேசுகிறார். கர்ஜிப்பதாக நினைத்து, கத்திப் பேசியுள்ளார். ஏன் இந்த வீர வசனம்? இதை எழுதிக் கொடுத்தது யார்? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் தந்திரம், அசிங்கம், புலம்பல் எல்லாம் தெரியும். ஒவ்வொரு வரிக்கும் திமுகவை குறை சொல்வது; திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என சொல்வது; மற்றவர்கள் எல்லாம் அல்லு, சில்லு என பேசியுள்ளார். அதிமுக மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களை…
அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தற்போதைய சவால்களைத் தாண்டி கட்சி மீண்டும் வலுவாக எழுச்சி பெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தங்களது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் துரோகங்களை எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தாம் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகும் பல்வேறு இன்னல்கள், சவால்கள் மற்றும் துரோகங்களை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த சிலர் தற்போது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையால் மனமுடைந்து தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், அதிமுகவின் தீவிர…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடுத்தகட்ட தேர்தல் பணிகளை முன்னிட்டு, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது மற்றும் வார்டு எல்லை மறுவரையறை செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரும், எல்லை மறுவரையறை ஆணையத் தலைவருமான திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி தலைமையில், சென்னை மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 177 கிராம ஊராட்சிகள் தொடர்பான விவகாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. கூட்டத்தில், மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மக்கள் தொகை, நிர்வாக வசதி மற்றும் பிரதிநிதித்துவ சமநிலையை கருத்தில் கொண்டு வார்டு எல்லை மறுவரையறை பணிகளை விரைவாக நிறைவு…
சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் தினமும் குவிந்து வருவதால், புகார் மனுக்களைப் பெறும் மனுப் பெட்டி தற்போது தலைமைச் செயலக வளாகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் தனிப்பிரிவு மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாகப் பெற்று, அவற்றுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனிப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மனுக்களைப் பெறுவதிலும், பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக ஏராளமானோர் தலைமைச் செயலக வளாகத்திற்குள் செல்ல முயற்சிப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள்…