Author: Editor web2
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக, ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்திரவாத இயக்கம் (கிராமின்)’ என்ற புதிய 125 நாள் வேலைத் திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் வரைவு அறிக்கையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளம் நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 12 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”125 நாள் வேலைத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் ரூ.3,923 கோடி (4.09%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் நிதி கிடைத்த…
திருச்சி, கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, மதுபானம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் திருச்சி கோட்டைப் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். பீதியில் பெண்கள் இதுதொடர்பாக கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தொடர்ச்சியாக அரங்கேறும் இதுபோன்ற கொடூர குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களின் பாதுகாப்புக் குறித்து பெரும் பீதியில் உறைந்து…
ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் எல் அண்ட் டி (லார்சன் & டூப்ரோ) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ச.ஜோசப் விஜய்யை இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, லார்சன் & டூப்ரோ லிமிடெட் (L&T) நிறுவனம், தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் .ச.ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்…
கேரளப் பகுதிகளில் இன்று (ஜூன் 4) முறைப்படி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தமிழகத்தின் சில பகுதிகள், கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் வேகமாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 26 மாவட்டங்களில் கனமழை பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாளை (ஜூன் 5) தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 6 முதல் 10 வரை மழை நீடிக்கும்…
மின்சார வாரிய தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக சொல்லப்படும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்பவே ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருவதாக தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்று இதுவரைக்கும் மின் விநியோகம் தொடர்பாக ஓர் ஆய்வுக்கூட்டத்தை கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை. கடைநிலை வரைக்கும் உள்ள அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டம் நடத்தினால்தான் எந்த ஊரில் என்ன பிரச்சினை என்று தெரியும். அமைச்சரே தன்னை யாரோ மிரட்டுவதாக சொல்கிறார்; அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது எனப் பாருங்கள். டெண்டர் விடுவதில் யாரும்…
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தச் சதி அரங்கேறியுள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். யாரைக் காப்பாற்ற இந்தச் சதி? இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், மின்துறை தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “தங்களைத் தூயசக்தி என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், டெண்டர் தொடர்பான முக்கியத் தரவுகள் இவ்வாறு காணாமல் போயிருப்பதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்ள…
சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் இருந்து, நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு நடத்திய சில நாட்களிலேயே, மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தத் துணிச்சலான சதி அரங்கேறியுள்ளது. துறை அதிகாரிகளின் துணையோடு சதியா? மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ₹397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகளும் 2021-2023 காலகட்ட மின்வாரிய டெண்டர்களை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்தத் திருட்டு நடந்துள்ளது. முக்கியமாக, இந்தத் துறைப் பிரிவுகளில் இருந்த சிசிடிவி…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்குச் சரண்டர் செய்யக் கோரும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கும், அரசு மருத்துவர்களுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய புதிய அரசின் முறையற்ற வாதங்கள் மற்றும் மெத்தனப் போக்கின் காரணமாக தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. இதில் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 152 இடங்கள் காலியாக இருந்தன.…
இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது இருக்கும் வரிகளையும் கடந்து, கூடுதலாக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களில் ‘கட்டாய உழைப்பு’ அல்லது கொத்தடிமை தொழிலாளர்கள் (Forced-labour) பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அமெரிக்கா இந்த அதிரடி வர்த்தக நெருக்கடியைக் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய கூடுதல் வரி விதிப்பை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்த நிலையில், தற்போது ‘செக்ஷன் 301’ என்ற வர்த்தகச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி புதிய வடிவில் இந்த வரிகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த ‘கட்டாய உழைப்பு’ குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச்…
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP) ஆகிய பிராந்திய கட்சிகளை உடைத்து, ஆட்சியைப் பிடித்த பாஜகவின் அதே ‘சதுரங்க வேட்டை’ வியூகம், தற்போது மேற்குவங்கத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரம் பரபரத்து கிடக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக புதிய ஆட்சியை அமைத்தது. தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் மீள்வதற்குள்ளாகவே, அக்கட்சி தற்போது வரலாறுகாணாத பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், இதன் பின்னணியில் டெல்லி பாஜகவின் ‘மகாராஷ்டிரா மாடல்’ திரைமறைவு வேலைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. மம்தாவுக்கு எதிராக திரண்ட எம்.எல்.ஏ-க்கள் இந்த அரசியல் பூகம்பத்தின் தொடக்கமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கான கடிதத்தில் தங்களது கையெழுத்துக்கள்…