Author: Editor TN Talks

சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ”திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். எல்லருக்கும் எல்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விழா. உண்மையான ஆன்மிகவாதிகள், இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தையல்ல. இந்த மாநாட்டை பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என மாற்றியது தான் சமூக மாற்றம். கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது கூடா யாருக்கும் தெரியாது” என்றார்.

Read More

பொலிவியாவில் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது அப்பகுதியில் இருந்தவர்களா என அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்ற அப்பகுதி மக்கள் கீழே சிதறிய பண நோட்டுகளை எடுத்துச் செல்வதில் முண்டியடித்துக் கொண்டனர். கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். விபத்து காரணமாக எல் அல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இம்முறை திமுக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தலைமையிடமும் தொகுதி மக்களிடமும் நல்ல பெயர் எடுத்து வெற்றி வாய்ப்பு 50%-த்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ‘சீட்’ என்பதில் உறுதியாக உள்ளதாம் திமுக தலைமை. எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகின்ற சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெரும் முனைப்போடு தகுதியான வேட்பாளர்களை மட்டுமே களமிறக்க திட்டமிட்டுள்ள திமுக, அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ள உடன்பிறப்புகள் யார்? யார்? என்ற விவரத்தை சேகரித்துள்ளதாம். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்தவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டிய சட்டமன்ற உறுப்பினர் லிஸ்டையும் கூடவே எடுத்து வைத்துள்ளது திமுக தலைமை. தத்தமது தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடையே சம்பாதித்து வைத்துள்ள அதிருப்திகளும் அது தொடர்பான கருத்துக்களும் கூட பரிசீலிக்கப்படுகின்றன. அந்த வகையில்…

Read More

தமிழ்நாடு அரசியல் களம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில், சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், இம்முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும், கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்தாண்டு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். ஆனால் திமுக சார்பில் முதலமைச்சர் வரை ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதற்கிடையில் விஜய்யின் தவெகவிடம் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், விஜய்யை சந்தித்தது உண்மை தான் எனவும் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ்…

Read More

சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- இரா. நல்லக்கண்ணு தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர். தனது15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.…

Read More

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரை திமுக பேச்சுவார்த்தைக் குழு  அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.யூ.எம்.எல்.  தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தாங்கள் 5 சீட்டு கேட்டதாகவும், திமுக 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 23ஆம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி ,  மதிமுக , மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுடனும், 26 ஆம் தேதி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  27 ஆம் தேதி – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி,  காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டி தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ ஆகியோர்…

Read More

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் பிரேமலதாவின் தேமுதிகவும் இணைந்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 22ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்த திமுக தலைமை, டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினையும் அண்மையில் அறிவித்தது. இன்று திமுகவின் பேச்சுவார்த்தைக்குழு, கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடன்கியிருக்கிறது. முதல்நாளான இன்று, இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சியுடன், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படும். நாளை வைகோவின் மதிமுகவுடனும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியுடனும், 26ஆம் தேதி…

Read More

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற ஆகப் பெரும் நடிகர்களுக்கு இடையே இருந்த தொழில் முறையான போட்டி, அவர்களுக்கு பிறகு ரஜினி – கமல் இடையே தோன்ற ஆரம்பித்தது. இருவரும் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் ரசிகர்கள் இரு பிரிவினராக இருந்து தங்களுக்குள் இருவருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இருவரும் சேர்ந்து 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், தில்லு முல்லு என சில படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், இருவரும் ஒருசேர முழுநேர படங்களில் நடிக்கவில்லை. பல நேரங்களில், பல இடங்களில், பல ரசிகர்கள் ரஜினி – கமல் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடித்தால் எப்படி இருக்கும்? சீக்கிரம் அதனை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி வந்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது. இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக கடந்தாண்டு தகவல் ஒன்று வெளியாக இருவரின் ரசிகர்களும் குஷியில்…

Read More

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருபுறம் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என பலர் கூறி வருகின்றனர். மறுபுறம் திமுக மீதான அதிருப்தியால், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், மாநிலத்தை பாஜகவிடம் அடகு வைத்தாற்போல் ஆகிவிடும் என்பதால், அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என திமுகவினர் கூறி வருகின்றனர். இன்னொரு புறம் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் வழக்கம் போல கூட்டணி ஏதும் அமைக்காமல் தனித்து 234 தொகுதிகளிலும் களம் காணவுள்ளனர். இவர்களை கடந்து இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நபர் என்றால் அது தவெக தலைவர் விஜய் தான். தவெக என்ற கட்சியை தொடங்கி 3 வருடங்கள் ஆன நிலையில், முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருப்பதாலும், ஜென் சி வாக்காளர்கள் அவருக்கு ஆதரவு தருவதால் கணிசமான…

Read More

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். “அப்போது பேசிய அவர், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவா் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுபோன்ற எந்தவித நிபந்தனையும் விதித்தது இல்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணி கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது; ஏற்கப்படாது. மதிமுக சோா்ந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடந்து சென்று பல லட்சம் மக்களை சந்தித்து வருகிறேன். திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக திகழும். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என்றாா்.

Read More