Author: Editor TN Talks

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனைத்து பெரிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே இருந்த கூட்டணி கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் நிலையில், தொகுதிகளை மட்டும் அதிகம் கேட்டு பெறக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு நேர்காணலும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், கூட்டணியில் இணைய விருப்பமுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும், பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் விபி.துரைசாமியும், துணைத் தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநிலத்…

Read More

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையேயான பனிப்போர் மெல்ல வெடிக்க தொடங்கியுள்ளது. சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என கூறி அதிமுகவை மீட்போம் என்ற இலக்கோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார் தொடங்கியது முதலே எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தும் அதிமுகவை எதிர்த்து 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் கண்டது டிடிவி தலைமையிலான அமமுக. 2021 தேர்தல் முடிவுகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கியத்துவத்தை டெல்லி பாஜகவிற்கு உணர்த்தியது இதனை அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சமாதானம் செய்து கூட்டணிக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும்…

Read More

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து – தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் – வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு…

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிரூத். தமிழ் தாண்டி பிற மொழிகளில் இசையமைத்து வரும் அனிரூத், தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது சிறுவயது அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும் போது ரூ.500சம்பளமாக கொடுத்துள்ளார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள். இப்போது கோடிகளில் சம்பளம் மாறிவிட்டாலும், பரபரப்பாக இசைப்பணியில் மூழ்கி கிடந்தாலும், முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது” என கூறியுள்ளார்.

Read More

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமை தொகை, இலவச வீடு, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, முதியோர் உதவி தொகை, பல ஆண்டுகளாக சில நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது, மின் கட்டண சலுகை, கல்லூரி மாணவர்களுக்கான சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் எனவும், அலுவல் குழு கூடி, சட்டப்பேரவை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்…

Read More

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவுக்கு இரண்டு நாள் பயணமாக புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. மலேசியாவுக்கு புறப்படும் முன் சமூகவலைதளத்தில் இந்த பயணம் குறித்து பதிவிட்ட அவர், ” விரிவான உறவுகளைக் கொண்ட நாடு மலேசியா. எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், நான் மலேசியாவுக்கு பயணம் செய்கிறேன். இந்த பயணம் நமது விரிவான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்துவதோடு, அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் துடிப்பான தாயகமாக மலேசியா உள்ளது. கோலாலம்பூரில் இன்று நடைபெறும் சமூக நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அங்கு, புலம்பெயர்ந்த மக்களுடன் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்’’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் சமீப ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை…

Read More

தவெக சார்பில் வழங்கப்படும் விருப்ப மனுக்கள பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் நேற்று ( 06.02.2026 ) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதனைப் பெறுவதற்காக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 14-ம் தேதி வரை அலுவலகத்தில் நிர்வாகிகள் பொறுமையாக விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், விருப்ப மனுக்களை பெற யாரும் கட்சி அலுவலகம் வரவேண்டாம் என கூறியிருப்பது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளில், ஆயிரக்கணக்கான…

Read More

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்தியாவிற்கு, அமெரிக்காவிற்கும் ஒரு மகத்தான செய்தி, இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியா, அமெரிக்கா இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் ஆழப்படுத்தும். உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற…

Read More

முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் தவெக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ( 06.02.2026 ) தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் தீர்ந்துவிட்டதாக கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. பொதுவெளியில் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஆக்கி வருகிறது. இதற்கு தவெக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், ”வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம், ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதலமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அடுத்து சேலத்தில் 13-ம் தேதி விஜய் பிரசாரம் செய்ய…

Read More

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கலவரம் நீடித்ததால் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய பாஜக அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்த குக்கி இன எம்.எல்.ஏக்களை கண்டித்து சுரசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், சந்தைகள் மூடப்பட்டு, குறைவான வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வந்திருந்தட்னர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டன. முன்னதாக துய்போங் வனத்துறை கேட் அருகே கடந்த 5-ம் தேதி இரவு வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேற்று…

Read More